
3832
மதி மண்டலத்து அமுதம் வாயார உண்டே,
பதி மண்டலத்து அரசு பண்ண – நிதிய
நவநேயம் ஆக்கும் நடராஜனே! எம்
சிவனே! கதவைத் திற!
3833
இந்தார் அருள் அமுதம் யான் அருந்தல்
வேண்டும் இங்கே, நந்தா மணி விளக்கே!
ஞான சபை – எந்தாயே!
கோவே, எனது குருவே! எனை ஆண்ட
தேவே, கதவைத் திற!
3834
சாகா அருள் அமுதம் தான் அருந்தி
நான் களிக்க, நாகா அதிபர் சூழ் நடராஜா
– ஏகா! பவனே! பரனே! பராபரனே! எங்கள்
சிவனே, கதவைத் திற!
3835
அருள் ஓங்கு தண் அமுதம் அன்பால்
அருந்தி,
மருள் நீங்கி நான் களித்து வாழப் –
பொருள் ஆம் தவநேயர் போற்றும்
தயாநிதியே! எங்கள்
சிவனே, கதவைத் திற!
3836
வானோர்க்கு அரிது எனவே மாமறைகள்
சாற்றுகின்ற,
ஞானோதய அமுதம் நான் அருந்த –
ஆனாத் திறப்பா வலர்போற்றும்
சிற்றம்பலவா! சிறப்பா கதவைத் திற!
3837
எல்லாமும் வல்ல சித்து என்று எல்லா
மறைகளும் சொல்,
நல்லார் அமுதம் அது நான் அருந்த –
நல்லார்க்கு நல்வாழ்வு அளிக்கும்
நடராயா! மன்று ஓங்கு செல்வா!
கதவைத் திற!
3838
ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற
தண் அமுதம், வாழ்நிலைக்க நான் உண்டு
மாண்பு உறவே – கேழ் நிலைக்க, ஆவா
என்று என்னை உவந்து ஆண்ட
திரு அம்பலமா தேவா, கதவைத் திற!
3839
ஈன உலகத்து இடர் நீங்கி, இன்பு உறவே!
ஞான அமுதம் அது நான் அருந்த – ஞான
உருவே! உணர்வே! ஒளியே! வெளியே!
திருவே! கதவைத் திற!
3840
திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே,
வரை ஓது தண் அமுதம் வாய்ப்ப – உரைஓது,
வானே! எம்மானே! பெம்மானே! மணி
மன்றில் தேனே! கதவைத் திற!
3841
ஜோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம்
மேதினி மேல் நான் உண்ண வேண்டினேன்
– ஓதரிய, ஏகா! அனேகா!
எழில் பொதுவில் வாழ் ஞான
தேகா! கதவைத் திற!
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜