அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

வள்ளலாரின்

உபதேசப்பகுதி


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

2. சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய

ஜீவகாருண்ய ஒழுக்கம்
முதற் பிரிவு

முச்சுடர்

(சூரியன் - சந்திரன் - அக்கினி)

சூரியன் ஆணாகவும் சந்திரன் பெண்ணாகவும், வலம் இடம் சத்தி சிவமுமாக வுடையது மருட்டேகம். வலம் சந்திரனாகிய சத்தியாயும் இடம் சூரியனாகிய சிவமாயு மிருப்பது அனுபவம். திரிசிய அனுபவத்திலுள்ள இடம் வலமாகவும் வலம் இடமாகவும் அனுபவந் தோன்றும்.

மேலும் சூரியன் அக்கினியோடு கூடினால் திங்களும், சந்திரன் அக்கினியோடு கூடியபோது பானுவும், சூரியன் மதியோடு கூடிய போது பௌமனும், சந்திரன் பானுவொடு கூடியபோது சௌமியனும், சூரியன் சௌமியனொடு கூடியபோது குருவும், சந்திரன் பௌமனொடு கூடியபோது பிருகுவும், சூரிய சந்திரர்கள் அக்கினியோடு கூடிய போது மந்தனும் தோன்றும். ஆக 7.

மேற்படி சூரியனுக்குக் கலை 16.மேற்படி கலை 16-ல் சந்திரனுக்குக் கலை 4 போக, இருப்பு கலை 12. சூரியன் காரியவுருவன். சந்திரனுக்குக் கலை 16. மேற்படி கலை 16-ல் தாரகைகளுக்குக் கலை 4 போக, சூரியனால் கொடுத்த 4 கலையுஞ் சேர்த்து சந்திரனுக்குக் கலை 16. சந்திரன் காரியகாரண உருவன். சகலன் சூரியன், கேவலன் சந்திரன். அனுபவத்தில் இடம் வலம் போல் மாறும். பிரமத்துவம் சூரியனிடத்திலும், விஷ்ணுத்துவம் சந்திரனிடத்தினும் உள்ளன. அக்கினிக்குக் கலை 64. இப்போது எட்டுக் கலையோடு காரண உருவனாய் மற்றைக் கலைகளை உள்ளடக்கி நீருறு தீப்போல் எங்குமுடையவன். ஆகக் கலை 96. மேற்படி 96 கலையே 96 தத்துவமாய்ப் பிண்ட வடிவாயிற்று.
அக்கினிகலை 64-ன் குணங்கள் சைவத்தில் 64 திருவிளையாடல்கள் ஆகவும், உண்மை அடியார்கள் 63 அதீதம் ஒன்று ஆகவும் வழங்குகின்றன. சந்திரகலை 12-மே வைஷ்ணவ பரத்தில் துவாதச ஆழ்வார்களாக வழங்குகின்றன. மற்ற 20 கலையும் கௌமாரம், பாசுபதம், மஹாவிரதம், சாத்தேயம், காணாபத்தியம், காபாலம், சௌரம், மகம்மதீயம், பௌத்தம், கிறிஸ்துவம் முதலிய சமயங்களில் வழங்குகின்றன. இவற்றின் அனுபவங்களைக் குரு முகத்தில் அறிக.

மேற்குறித்த சோம சூரியர்கள் ஒன்றுபடுவது அமாவாசை, ஒன்றுபட்ட சோமன் ஒவ்வொரு கலையாகச் சூரியனிடத்திலிருந்து விடுபட்டு மேலேறிப் பகிரண்டத்தில் செல்லும்போது 16 கலையும் பூர்த்தியாய்ப் பிரகாசிப்பது பௌர்ணமி. பகிரண்டத்திலிருந்து பிரமாண்டத்திற்கு வியாபகமாகும்போது, சூரிய உஷ்ணம் சோமகலையை ஒவ்வொன்றாகக் கிரகிக்க ஒரு கலையோடு பானுவுடன்சேர்தல் அமாவாசை. மேற்படி சோமகலையைப் பானு கிரகிக்காவிட்டால் இவ்வுலகம் ஜீவிக்காது. சூரியன் பிரமாண்ட பகிரண்ட வியாபகி, சந்திரன் பகிரண்ட பிரமாண்ட வியாபகி, சூரியவியாபகம் தோன்றாது, சந்திரவியாபகந் தோன்றும்.

அனுபவத்தில் சத்தி சிவம்
சூரியன் அக்கினியோடு கூடியபோது சந்திரனாம். சந்திரன் அக்கினியோடு கூடியபோது சூரியனாகும். சூரியன் ஆணாகவும் சந்திரன் பெண்ணாகவும், வலது பாகம் சிவமாகவும் இடது பாகம் சத்தியாகவும் வழங்கி வருவது மருட்டேக நியாயம். வலது பாகம் சத்தியாகவும் இடது பாகம் சிவமாகவு மிருப்பது அனுபவம்.

சந்திரன் சூரியன் அக்கினி

ரூபாரூபி ரூபி அரூபி

காரியகாரணன் காரியன் காரணன்

சோபாமாத்திரன் ஒளிமாத்திரன் பிரகாசமாத்திரன்

சுடாத தன்மை சுட்டுஞ் சுடாத தன்மை சுடுந்தன்மை

கலை 12, தாரகை கலை4 கலை16 கலை 64

அர்த்தவடிவன் வட்டவடிவன் பூர்ண வடிவன்

பிரமாண்ட பகிரண்ட பிரமாண்ட வியாபகி எங்கும் வியாபகி
வியாபகன்

பச்சை வெண்மை பஞ்சவர்ணம்* சுவர்ணம்
கலந்த மேனி

மனஅறிவு சபை ஜீவ அறிவு சபை ஆன்ம அறிவு சபை

மனஒளியே பதி ஜீவ ஒளியே பதி ஆன்ம ஒளியே பதி

*பஞ்சவர்ணங்களாவன:-

வெண்மை ஆதிசத்தி அனுக்கிரகம்

பச்சை பராசத்தி திரோபவம்

செம்மை இச்சாசத்தி சம்மாரம்

கருமை கிரியாசத்தி ஸ்திதி

பொன்மை ஞானசத்தி சிருஷ்டி